Page:முல்லைப் பாட்டு.pdf/10

This page has not been proofread.

இரண்டாம் பதிப்பு உரை

  முல்லைப்பாட் டாராய்ச்சி யுரையின் முதற்பதிப்புப் பிரதிகள் நெடுநாட்கள் முன்னரே செலவழிந்து போயின. அதனை மீண்டும் பதிப்பித்துத் தரும்படி பலர் பலகாற் கேட்டும்; அதனைப் பதிப்பிடுதற்குச் செலவிடும் பொருள் பதிப்பிட்ட பின் புத்தக விலையாற் பெறக்கூடாமற் போய்விடுதலானும்,இங்கனமே யான் புத்தகங்கள் பதிப்பிடுதலில் இரண்டாயிரம் ரூபாவுக்கு மேல் இழந்தேனுகையாலும் அதில் நோக்கமின்றி யிருந்தேன்.இவ்வருஷத்திய பீ.எ.வகுப்பு மாணவர்களுக்கு முல்லைப்பாட்டுப் பாடமாக இருத்தலால், எங்கள் கலாசாலைப் பீ.எ. வகுப்பு மாணவர்கள் இதன் ஆராய்ச்சி யுரையைப் பதிப்பிட்டுத் தரும் படி என்னை வேண்டியதோடு,அப்பதிப்பிற் காம்செலவும் முன்னர்த் தந்து உதவி செய்தமையால் இதனை மீண்டும் பதிக்கலாயினேன். இப்பதிப்பின் கட்சில கூட்டியும் சில குறைத்தும் விளக்க உரைக் குறிப்புகள் பல சேர்த்தும் திருத்தங்களும் மாறுதல்களும் செய்திருக்கிறேன்.
       இப்பதிப்புக்கு மாணவகரிடம் பொருள் திரட்டி உதவி செய்த மாணவர் ஸ்ரீ அரங்க ராமாநுசம் அவர்களுக்கு யான் நிரம்பக்கடமைப்பட்டிருக்கிறேன்.
        சென்னைக் கிறித்துவ}
           கலாசாலை}            நாகை வெதாசலம் பிள்ளை
          டிசம்பர் 7-19-10}